சத்திரம் தேடி


என் கன்னத்தில் பதிந்த முத்தம்
என் உடலெங்கும் தொடர!

வான்மகள் முத்தமழை - சொரிந்துகொண்டிருந்தால்!

மின்னலென
கண் விழித்து பார்த்தால்!

என் அங்கம் மறைத்திருந்ததோ
ஓர் கந்தல் துணி!

எள்ளி நகையாடினால் இடியென!

வெட்கத்தில் நிலவு மகளும்
அடைக்கலம் புகுந்தால்
மேகமகளிடம்!

ஓடினேன் சத்திரம் தேடி !

என் சாலையோர தூக்கத்தை மழை கலைத்ததால்!

*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை

Bookmark and Share

1 comment:

மதுரை சரவணன் said...

கவிதை சாரல் இன்னும் நிற்க வில்லை. வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails