தமிழன் என்று சொல்லடா


தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா

உனக்கு முன்னே பலபேரடா

இவர்களில் நீயும் வந்து நில்லடா

பாரும் வியக்கும் பாரடா

Bookmark and Share

காத்திரு!


வெள்ளம் வந்தால்

கரையில் ஊறும் எறும்பும்

இரையாகும் மீனுக்கு


வெள்ளம் ஓய்ந்தால்

அம்மீனோ இரையாகும் எறும்புக்கு


காலங்கள் மாறும்

ஏற்றங்கள் மறையும்

தடங்கல்கள் அகலும்

வழிகள் பிறக்கும்

காத்திரு!

Bookmark and Share

அவளின் முத்தம்




உலக வங்கியிடம்


நிற்பதைப்போல் நான்

மொத்தமாய் வேண்டாம்

சொச்சமாயாவது தா

சொர்கமாய் ஏற்கிறேன்

Bookmark and Share

மலர்ந்தும் மனக்கவில்லை



மலர்ந்தும் மனக்கவில்லை

அவள் வைத்த மல்லிகை

அவள் ம(ண)னக்க மறந்ததால்!

Bookmark and Share

சுமை


சிறைபட்டுக் கிடக்கும் குடும்பம்

சிறியவனின் தலையில்

பெரியவர்களின் பாரம்

Bookmark and Share

தொலைக்காட்சித் தொடர்



சமூகத்தில்


தொலைந்த பல காட்சிகளை

தினம் காட்டி

உறவுகளில் பிரிவுகளை தெளித்திடும்

காட்சித் தொடர்

Bookmark and Share

நான் உஷ்ணமாக!


பெண்ணே

குளிரில் நான் நடுங்கும்போதெல்லாம்

உன்னை மட்டும் நினைத்துக்கொள்கிறேன்

வேண்டுமென்றே திட்டிப்பிரிந்த

உன் வார்த்தைகளின் நினைவுகளால்


நான் உஷ்ணமாக!

Bookmark and Share

வண்ண மலர்களும் காத்திருக்கிறது




வண்ண மலர்களும் காத்திருக்கிறது

உன் கூந்தலில் தவழ

நானோ குழம்பி நிற்கிறேன்

எந்நிற ஆடையில் நீ வருவாயென

மலர் விற்பவளோ பார்வையிலே

என்னை சுட்டுவிடுகிறாள்

உன் ஆடையின் நிறத்தில் இல்லையென்று

நான் திருப்பித்தந்த மலர்களை

பார்த்தபோது!

*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை


Bookmark and Share

கவிதையே உனக்கும் தெரிந்துவிட்டதா



கவிதையே


மகிழ்ச்சியில இருக்கும்போது

பலமுறை அழைத்திருக்கிறேன்

நன்றாய் இருக்குமென்று! - நீயேன்

எப்போதும் சோகத்தல் இருக்கும்போதே வருகிறாய்


உனக்கும் தெரிந்துவிட்டதா

ஆறுதலுக்கு ஒருவருமில்லையென்று

Bookmark and Share

மதுவிலக்கு


வீட்டில் கூரையாய்

வேலியில் தடுப்பாய்

பந்தலில் எடுப்பாய்

தெய்வத்திற்கு படைப்பாய்

என் உடல் குளிர்ப்பாய்

விருந்திற்கு இனிப்பாய்

என் வாசலுக்கு பெருக்காய்

என அனைத்தும் நன்மைதர

உன் பதநீரேன் விலக்கானது!


ஓ உன் பதநீர் விட்டால்

பண நீர் கிட்டாதென்றா

இதில் மட்டும் விலக்கானாய்!

Bookmark and Share

ஜோதியிழந்து நிற்கும் யார் இவர்கள்?




இறைவனின் பெயரால் ஆசிரமங்கள்

ஆன்மீக உணர்வுகளை

வளர்க்கவேண்டிய இவர்கள்

வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்

ஆண்களில் உணர்வுகளை!


இவர்கள் சாமியார்களல்ல

சாமி யார் இவர்கள்?

ஜோதியில் ஐக்கியமாவோமென்றுசொல்லி

ஜோதியிழந்து நிற்கும் யார் இவர்கள்?


கடவுள்களின் லீலைகள் போய்


கயவர்களின் லீலைகள்

கடவுளின் பெயரில்!


Bookmark and Share

கருணையின் உருவம்



இன்பத்தை கருவாக்கினால்


இதயத்தை கல்லாக்கினால்

இறக்கமின்றி சிசுவை

வீதியிலெறிந்தால்


பிள்ளையை பெற்றவள்!



இதயமே கருணையாய்

இறைவனின் அவதாரமாய்

இல்லத்தின் வாசலைத் திறந்தாள்

தேசம் போற்றும் தாய்

அன்னை தெரசா!

*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை

Bookmark and Share

ஜனநாயகம்




மக்களுக்கு ஊழியம்
செய்வதாய் கூறி

அரசின் ஊழியர் மக்களிடம்

அட்டூழியமாய்

வாங்கிக் குவிக்கிறார்கள்

பலவகையில் ஊதியம்!

தட்டிக்கேட்கவேண்டிய தலைமையோ

கையூட்டு தந்தே

கையில் ஓட்டுபெற்றேன்

பலமுறையென்கிறார்

Bookmark and Share

முரண்பாடு


நாணயமானவர்கள் தேவை

ஓர் வட்டிக்கடை

விளம்பரம்


Bookmark and Share

நான் என்ன செய்வேன்


நிலவே
நீயும் படித்தாயா
என் காதலியிடமிருந்து!

ஏன் இப்படி ஓடுகிறாய்

காண்பவரெல்லாம்
வெட்கத்தில் ஓடினாள்
நான் என்ன செய்வேன்!


Bookmark and Share

சத்திரம் தேடி


என் கன்னத்தில் பதிந்த முத்தம்
என் உடலெங்கும் தொடர!

வான்மகள் முத்தமழை - சொரிந்துகொண்டிருந்தால்!

மின்னலென
கண் விழித்து பார்த்தால்!

என் அங்கம் மறைத்திருந்ததோ
ஓர் கந்தல் துணி!

எள்ளி நகையாடினால் இடியென!

வெட்கத்தில் நிலவு மகளும்
அடைக்கலம் புகுந்தால்
மேகமகளிடம்!

ஓடினேன் சத்திரம் தேடி !

என் சாலையோர தூக்கத்தை மழை கலைத்ததால்!

*******
நன்றி - தம்பி (சக்கரை குட்டி) கவிதை

Bookmark and Share

உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்





கருவாச்சி காவியமெழுத

நான் வைரமுத்துவல்ல!

கிறுக்கல்கள் எழுத
நான் பார்த்திபனுல்ல!

எண்ணங்களை ஓவியமாய் வடித்திட
நான் ராஜா ரவிவர்மனுமல்ல!

என் உள்ளத்தின் உணர்வுகளை
வரைந்திருக்கிறேன்
உன் பதிலுக்காக!

Bookmark and Share

மீன் விழியாளே உன் தந்தைக்காக





மீன் வளர்த்தேன்


உன் மீன் விழி கண்டு!


கொஞ்சிப் பேசும் கிளி வளர்த்தேன்

உன் சிணுங்கல்கள் கண்டு!


எனை நீ சுற்றுவது கண்டு

உன் செல்லப்பூனை வளர்த்தேன்!


நாய் வளர்க்கிறேன்

உன்னைக் கேட்க வந்த என்னை கடித்துக்குதறிய

உன் தந்தைக்காக!

Bookmark and Share

உன் கன்னங்களில் என் எண்ணம்போல் கொடுக்கலாமென்று



பெண்ணே


சமயத்தில் விளையாட்டென்ற பெயரில்

நீ சேட்டைகள் பல செய்யும் போது

ஆசையில் நினைத்திருக்கிறேன்!



உன் கன்னங்களில் என் எண்ணம்போல்

கொடுக்கலாமென்று





Bookmark and Share

அமைதியை தேடி இமயம் செல்லும் மனிதா




அமைதியை தேடி

இமயம் செல்லும் மனிதா!


உன் இதயம் நாடி

அமைதியை பெறு!


உயரே இருக்கும்

இமயம் வேண்டாம்!

உன்னுள் இருக்கும்

இதயமே போதும்!

Bookmark and Share

நட்பு




வெகுமதிக்காய்

வருவதல்ல நட்பு


வெகுவாய் மதிப்பதால்

வருவதே நட்பு!

Bookmark and Share

மறந்துவிடச்சொல்லிவிட்டாய் - என் இதயம் நின்றுவிட்டது



என்னுயிர் காதலியே!


அன்றொரு நாள் கோபத்தில் நீ

மறந்துவிடச்சொல்லிவிட்டாய் - என்

இதயம் நின்றுவிட்டது

வைத்தியர் கேட்டார்

இதயம் துடிக்கிறதாவென்று

இதயம் உறங்குகிறது

நான்தான் துடிக்கிறேனென்றேன்.

Bookmark and Share

பெண்ணே உன் பெயரில் ஓர் புகார் காவல்துறையில்



பெண்ணே

புகார் கொடுக்கலாமென்றிருக்கிறேன்

காவல்துறையில்!


இவள் சாலையில் வரும்போது தான்

விபத்துகள் ஏற்படுகின்றனவென்று!

Bookmark and Share

தானும் ஓர் செய்தியாய்! - மறைந்து போகிறாள்




புத்தகத்தை படித்துக்கொண்டு

சிரித்தவள் - இன்று

கைபேசியை பார்த்து சிரிக்கிறாள்


புத்தகங்களின் பக்கங்களை மாற்றியவள் - இன்று
கைபேசியின் எண்களை மாற்றிக்கொண்டிருக்கிறாள்!


சமூக கொடுமை செய்திகளை படித்தவள் - இன்று
தானும் ஓர் செய்தியாய்! - மறைந்து போகிறாள்


Bookmark and Share

என்னுயிர் ரோஜாவே - தோட்டத்தை பிரியாதே



என்னுயிர் ரோஜாவே


உன் இதழ்கள் கண்டே உனைக் காதலித்தேன்

என் இதழ் தந்தவுடன்

ஏன் இப்படி உதிர்ந்தாய்

இன்று புரிந்துகொண்டேன்

ஏன் ரோஜாக்கள் உதிர்கின்றனவென்று

உன் வாழ்வு (வளர்ச்சி) தோட்டத்தில்தான்

பிரியாதே பின் துயராதே!

காதலில் மயங்கி பின் பிரிவோர் - மறைவோர் நிலைகண்டு ஓர் புலம்பல்
Bookmark and Share

தனித்துக் காத்திருக்கிறேன்



உனக்காய் காத்திருக்கும்

ஒவ்வோர் நொடியும்!

கண்முன் அனைத்தும் நீயாய்

தவித்துப்போகிறேன்!

தாமதிக்காதே

கண்முன் வா!

Bookmark and Share

பெண்ணே எங்கே கற்றாய் "அந்த" வைத்தியத்தை



பெண்ணே

சாலையில் உன்னைக் கண்டதால்

என் கால்களில் ஓர் பிரட்சி

உச்சவேதனை

நரம்பு மண்டலத்தில்!

ஒரு கணம் அனைத்தும் மறந்தது

உன் பார்வையில்!

Bookmark and Share

கட்டணமின்றி ஆன்லைனில் வேலைகள் - நேரத்தை மட்டும் செலவாக்குங்கள்




கட்டணமின்றி ஆன்லைனில் வேலைகள்

பல காத்திருக்கிறது!

நேரத்தை மட்டும் செலவாக்குங்கள்

பயனடையுங்கள்

மேலும் தகவல்கள் மற்றும் ஆன்லைன் வேலைகளுக்கு
பார்க்க http://www.thegenuineonlinejobs.com



Bookmark and Share

மகனின் ஏக்கம் விழவில்லை - இது வீழ்ச்சியுமில்லை பயின்றிருக்கிறேன்




குழந்தையில் நான்

நடைபழகியபோது

விழுந்தது

ஓராயிரம் முறை

விழுந்தேனே என நீ - வந்தபோதெல்லாம்

திட்டாதே - தூக்காதே

அவன் எழுவான் வளர்வானெனச் சொன்ன

உன் கணவன் - இன்றேன்

பைத்தியமானான் (சிந்தை மாறினான்)

தொழில் தொடங்கியதோ இப்போது

விழவில்லை - இது வீழ்ச்சியுமில்லை

பயின்றிருக்கிறேன்

புது உத்தியை என் வியாபாரத்தில்

ஏன் தடுக்குகிறீர்கள் - விடுங்கள்

எழுவேன் வளர்வேன் உயர்வேன்!


Bookmark and Share

தொட்டில் குழந்தைகள் - தாய் மறந்த குழந்தைகள்



மடியில்லாமல்

தாய் பிடியில்லாமல்

என் பிடியில்

ஓர் படி பால்!

Bookmark and Share

முதல் தார குழந்தைகள் - சித்தியின் வீட்டில்


காக்கை கூட்டில்


குயில் குஞ்சுகள்

Bookmark and Share

பறவையின் தைரியம் - மனிதனின் குழப்பம் - விடியலைத்தேடி - உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்



முறியும் நிலையில் கிளை

வேகமாய் வந்தமரும் பறவை

கிளை முறிந்தால்

உன்நிலை பறந்துபோவென

கோபத்தில்மனிதன்

இருப்பிடத்தில் குழப்பமென்றால்

வாழ்க்கை தொலைக்கும் மனிதா!

என் சிறகுகள் இருக்க

கிளைகள் முறிந்தாலென்ன!

திடம் கொள் நீயும் வளர்வாய்!


Bookmark and Share

சோகத்தில் காதலனின் வருகைக்காக காத்திருக்கும் பெண் - அவன் முகம் பார்க்க காத்திருக்கிறேன்!



பரந்த வெளி


தடங்களுக்கு ஒருவருமில்லை

நானாகவிருந்தால் துள்ளிக் குதிப்பேன்!

ஏன் இப்படி இளைத்துப்போகிறாய்!

என்ன கவலை சொல் நிலவே!

நான் தான்! என்னவன்

ஊருக்கு சென்றுவிட்டானென

வாடுகிறேன்


நீயும் ஏன் வாடுகிறாய்!

என்னுடன் துரத்திப் பிடிக்க

உன் தோழனவன் இல்லையென்றா!

Bookmark and Share

ஒரு காதலனின் ஏக்கம் - தொலைபேசியில் காதலி


பெண்ணே

தொலைவில் இருந்து

தொலைபேசியில் பேசும் போது

என்னருகில் இருக்கும் நீ


ஏன்

என்னருகிலிருந்து பேசும்போது


தொலைவிலிருக்கிறாய்

Bookmark and Share

பெண்கள் வல்லவர்கள்



ஒற்றர் படையில்

பெண்கள் வல்லவர்களென்று

அன்று சொன்னாய்

மறுத்துவிட்டேன்! மன்னித்துவிடு

எனைக் கண்டது நீ இரு நொடிகள்

இரவொளியில் நானே

உனையறியமுடியவில்லை!

எப்படிப் பட்டியலிட்டாய்!

Bookmark and Share

வழிப்போக்கன் கவிதைகள் - தேங்காய்


உன் கண்கள்

மூடியதால்தான்

உன் க(த)ண்ணீர் இனிக்கிறதோ!

- தேங்காய்
(வழிப்போக்கன் கவிதைகள்)

Bookmark and Share

உன் நட்போடு வாழ பல ஜென்மங்கள் வேண்டும்


உயிரோடு வாழ

ஒரு பிறவி போதும்

உன் நட்போடு வாழ

பல ஜென்மங்கள் வேண்டும்


Bookmark and Share

பேசிக்கொண்டே இருக்க வேண்டும் உன்னுடன் மட்டும்!


பேசியது நினைவில்லை

பேசுவது புரியவில்லை

பேசப்போவது தெரியவில்லை

இருந்தாலும் பேசிக்கொண்டே

இருக்க வேண்டும்

உன்னுடன் மட்டும்!


Bookmark and Share

என் கிறுக்கல்கள் கவிதையானது


என் கிறுக்கல்களைக்

கவிதை என்கிறார்கள்!

பெண்ணே உன்னைப்பற்றி

எழுதியதால் தானோ!


Bookmark and Share

இறக்கைப் பந்து




இறந்தும் பறக்கிறது

கோழி இறக்கைப் பந்தாக!

Bookmark and Share
Related Posts with Thumbnails