குழந்தையில் நான்
நடைபழகியபோது
விழுந்தது
ஓராயிரம் முறை
விழுந்தேனே என நீ - வந்தபோதெல்லாம்
திட்டாதே - தூக்காதே
அவன் எழுவான் வளர்வானெனச் சொன்ன
உன் கணவன் - இன்றேன்
பைத்தியமானான் (சிந்தை மாறினான்)
தொழில் தொடங்கியதோ இப்போது
விழவில்லை - இது வீழ்ச்சியுமில்லை
பயின்றிருக்கிறேன்
புது உத்தியை என் வியாபாரத்தில்
ஏன் தடுக்குகிறீர்கள் - விடுங்கள்
எழுவேன் வளர்வேன் உயர்வேன்!
No comments:
Post a Comment