முல்லை பெரியாறு

மறந்த வேற்றுமை
மீண்டும் வருகிறது
ஜனத்தை பிரிக்க
ஜலத்தை காட்டி!


முள்ளி வாய்க்காலில்
கொள்ளி வைத்தான்
இடையில் வந்தவன்!

முல்லை பெரியாறில்
கொள்கை மறந்தான்
இடுக்கியில் இருந்தவன் !

முள்ளியில் மறந்ததை
முல்லையில் மறக்கலையே
துரோகம் செய்தால்
மன்னியோம்
திருப்பித் தருவோம்
அது முல்லையானாலும் சரி
முள்ளியானாலும் சரி


இனி இது முல்லைபெரியாறல்ல
முள்ளில் பெரியாறு!




Bookmark and Share

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails